இத்திட்டம் தமிழக அரசால், விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். விவசாயப் பணிகளுக்காக பாசன வசதி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நோக்கம்:
- விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல்.
- சிறு பாசனத்திற்கு விவசாயிகளுக்கு உதவியளித்தல்.
- விவசாயப் பணிகளை மேற்கொள்ள மக்களுக்கு ஊக்கமளித்தல்.
பயன்கள்:
ஆழ்துளைக்கிணறு, கிணறு வெட்ட மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படும்.
விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரங்களை சுலபமாக பயன்படுத்த வழிசெய்யப்படும்.
தகுதி: கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் பயன்களைப் பெற தகுதி உடையவராவர்.
இத்திட்டத்தின் பயன்களை அடைய விரும்பும் விவசாயிகள் கீழ்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
- உதவி செயற்பொறியாளர், வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை
- செயற்பொறியாளர், மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை
- மேற்பார்வைப் பொறியாளர்
- முதன்மை பொறியியலாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை 35. தொலைப்பேசி: 2435 2686, 2435 2622
இத்திட்டம் பற்றிய மேலும் தகவல்களை இங்கே காணவும்.
தமிழில்: ஜ.சிவகுரு.
sar need your halp please call me 9791668419