தமிழகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சிக்காக இத்திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள விவசாயப் பணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணாளிகள்:
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளும், விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளோரும் பயனடைவர்.
பயண்கள் :
நிலப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். சுய வேலைகளுக்காக 10 சதவீதமும், சமுதாய பணிகளுக்கான செலவுகளில் 5 சதவீதமும் பங்களிக்கவேண்டும். பழங்குடியினருக்கான சுய வேலைகளுக்கு 5சதவீதம் பங்களிப்பு போதுமானது.
தகுதி:
மேற்குறிப்பிட்ட பகுதிகளின் கீழ் வரும் நிலங்களின் உரிமையுடைய விவசாயிகள்ள இத்திட்டத்தின் பயணடைய தகுதியுடையவராவர்.
இத்திட்டத்தின் பயணடைய விவசாயிகள் கீழ்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்:
- உதவி செயற்பொறியாளர், வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை
- செயற்பொறியாளர், மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை
- மேற்பார்வைப் பொறியாளர்
- முதன்மை பொறியியலாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை 35. தொலைப்பேசி: 2435 2686, 2435 2622
இத்திட்டம் பற்றிய மேலும் தகவல்களை இங்கே காணவும்
தமிழில்: ஜ.சிவகுரு