தற்போது இந்தியாவில் தொடக்க நிறுவங்களுக்கான ஏற்பட்டுள்ள ஏற்றத்தைத் தொடர்ந்து, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில் தொடங்குவதை எளிமையாக்கவும் மத்திய அரசு புதிய இணையத்தை தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து பதிவுகள் தொடரும். இந்த ஆண்டு ஜனவரி 16 அன்ற அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்ட் அப் இந்தியா’வின் செயல் திட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிற் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் செயலாளர் திரு. ரமேஷ் அபிஷேக் கூறியுள்ளார். மேலும், அறிவுசார் சொத்து உரிமைகள் பதிவுக்கான ...
Read More »சுகன்யா சம்ரித்தி யோஜனா
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் திட்டம், பெண் குழந்தைகளின் வளமான எதிர் காலத்திற்காகவும், அவர்களுக்கு முறையான கல்வி மற்றும் கல்யாண செலவுகளுக்கு உதவுவதற்காகவும், பிரமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டது. இந்தத் திட்டம் பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்க்கும் வழங்கும் நிதி தர்சார்பின்மை மற்றும் பாதுகாப்பின் காரணமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ...
Read More »கிராமப்புற இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கான புதிய திட்டம்
தீனதயாள் உபாத்யாய் ஸ்வானியோஜன் யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறத்தில் தொழில் முனைவோரையும் தொழில் துவக்கும் சூழ்நிலையையும் ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு தயாராகிவருகிறது. கிராம வளரச்சி அமைச்சகம், முத்ரா வங்கி கடன்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர கடன் வசதி வழங்குவோருடன் இந்தத் திட்டத்தை வடிவமைத்து வருகிறது. ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த திட்டம் கிராமபுற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் புதிய வணிகம் ...
Read More »கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் இந்தியாவுடன் ஜெர்மனி சேர்ந்து பணியாற்றவுள்ளது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நகரங்களின் பட்டியலில் இடம் பெற்ற கொச்சி, புவனேஸ்வர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களின் வளர்ச்சித் திட்டத்தில் ஜெர்மனி பங்களிக்கும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, கட்டிடம் மற்றும் அணு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் குன்தர் அல்தர் கூறியுள்ளார். முன்னதாக, ‘ஸ்மார்ட்’ நகரங்களாக வளர்ச்சி அடையக்கூடிய நகரங்களைக் கண்டறிய ஜெர்மனி இந்தியாவுடன் இணைந்து ஆறு ...
Read More »ஜுன் 25க்குள் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு தேர்தெடுக்கப்பட்ட மாநகரங்களிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.வெங்கய்யா நாயுடு, ‘ஸ்மார்ட் இந்தியா திட்டம்: ஆடுத்த கட்ட நடவடிக்கைகள்’ என்ற கருத்தறங்கில் பங்கேற்று பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாநகரங்களை, ஜுன் மாதம் 25ஆம் தேதிக்குள், அந்தந்த மாநகரங்களுக்கான திட்டங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். “இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநகரங்களும் எந்தவொரு பாகுபாடின்றியும் நடுநிலையோடும் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். மக்களின் பங்களிப்பு, பொதுப் பிரச்சனைகளுக்கான தெளிவான தீர்வுகள், மாநகரின் குறிக்கோள் ...
Read More »தமிழகத்தின் கல்வித்திட்டங்கள்
2012-13ல் தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின வகுப்புகளுக்கான அனைத்து நலத் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் அத்திட்டங்களை அமல்படுத்தும் அரசு துறைகளைப் பற்றியும் அதிகாரப்பத்திரம் வெளியிட்டது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 69% மக்கள் மேற்குறிப்பிட்ட வகுப்புகளைச் சேர்ந்தவராவர். அனைத்துத் திட்டங்களும் சமூக பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த வளர்ச்சியை சார்ந்தவை. சமூக, பொருளாதார மற்றும் கல்விநிலையில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முக்கியப்பங்கு வகிப்பதால், அரசு கீழ்க்கண்ட ...
Read More »உயர்கல்வி தொடர்பான 12,000 இ-புத்தகங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இலவசமாக வழங்குவிருக்கிறது
இ-பாடசாலா திட்டத்தின் கீழ் மத்திய மனித வள மேட்பாட்டு அமைச்சகம், உயர் கல்விக்கான 12,000 இ-புத்தகங்களை அடுத்த மாதத்தில் வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தகங்கள், கைபேசியின் செயலியில் (Mobile App) இலவசமாக வழங்கப்படும். இதைப்பற்றி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்த படிக்கும் பொருட்கள் உயர்கல்வி சம்பந்தமான பல்வேறு பாடங்களையும், தலைப்புகளையும் உள்ளடக்கியதாக அமையும் என்று கூறினார். முன்னதாக, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ...
Read More »