பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தின் முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள 20 நகரங்களின் பட்டியலை, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான வெங்கயா நாயுடு கடந்த வியாழனன்று(30 ஜனவரி 2016) வெளியிட்டார். இறுதிசெய்யப்பட்ட 98 மாநகரங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 20 மாநகரங்களில், புவனேஷ்வர் முதலிடத்திலிருக்கிறது. இப்பட்டியலில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 40 மற்றும் 38 மாநகரங்கள் இணைக்கப்படும்.
நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகள், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள், சிறந்த வாழ்வாதாரம் போன்ற பல வசதிகளுடன், நல்ல தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான கட்டமைப்பும் கொண்ட நகரமே, ஸ்மார்ட் சிட்டி என்றழைக்கப்படும். தகவல் மையங்களும், தானியங்கி சென்சார் நெட்வொர்குகளும் இந்த தொழில்நுட்பத்தில் அடங்கும்.
இந்தத் திட்டத்தின் கீர், ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தது ஒரு ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த 20 மாநகரங்களில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு 50,802 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருக்கிறது. இத்தொகையில், 38,693 கோடி ரூபாய், அப்பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், மீதமுள்ள 12,109 கோடி ரூபாய் மாநகர மேலாண்மைக்காகவும் செலவிடப்படும்.
இந்த 20 மாநகரங்கள், குறிப்பிட்ட சில பகுதிகளுக்காக மறு சீரமைப்புக்காகவோ, அல்லது மறு வளர்ச்சிக்காகவோ, திட்டம் வழங்கியுள்ளதாக நாயுடு கூறியுள்ளார். உதாரணமாக, புவனேஷ்வரில் மாநகரின் மத்திய பகுதியான, ரயில் நிலையத்தை சுற்றிய 985 ஏக்கர் நிலம் மறுவடிவமைக்கப்படும். ஜெப்பூர் மாநகரம் மதில்களால் சூழப்பட்ட 600 ஏக்கர் மாநகரப் பகுதியின் காட்சியமைப்பையும் அழகையும் கூட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 20 மாநகரங்களின் பட்டியல்:
1. புவனேஷ்வர், ஒடிசா
2. பூனே, மகாராஷ்ட்ரா
3. ஜெய்பூர், ராஜஸ்த்தான்
4. சூரத், குஜராத்
5. கொச்சி, கேரளா
6. அகமதாபாத், குஜராத்
7. ஜபல்பூர், மத்திய பிரதேசம்
8. விசாகபட்டினம், ஆந்திர பிரதேசம்
9. சோலாபூர், மகாராஷ்ட்ரா
10. தாவநாகரே, கர்நாடகா
11. இந்தோர், மத்திய பிரதேசம்
12. புது டில்லி முனிசிபாலிட்டி கார்பரேசன்
13. கோயம்புத்தூர், தமிழ்நாடு
14. காக்கிநாடா, ஆந்திர பிரதேசம்
15. பெலாகவி, கர்நாடகா
16. உதய்பூர், ராஜஸ்தான்
17. குவஹாத்தி, அஸ்ஸாம்
18. சென்னை, தமிழ்நாடு
19. லூதியானா, பஞ்சாப்
20. போபால், மத்திய பிரதேசம்
மூலம்: The Hindu
தமிழில்: ஜ.சிவகுரு